From the recordings Adhu Nilavu (The Moon) - Composed, Music Produced, Arranged, Sung by S. J. Jananiy. Words of Ka. See. Sivakumar. Lyrics Compiled by Rameshvaidya. and Collection of S. J. Jananiy's Playback, Pop, Fusion, Classical Vocal & Keyboard, Bhajan, Western Classical & Carnatic Symphony.
Lyrics
தேயும் ஓயும் பாயும்
ஆகாச கற்பூரம்
இரவுதோறும் மாறும்
மாயத்திரை வீசும்
நிசித்திரை ஒளித்துளை
தனித்துணை
வானில் உழுது தேயும் வட்டக் கலப்பை
விண்மீனில் பெற்று மீளும் விட்ட இழப்பை
அது நிலவு அது நிலவு அது நிலவு
கறுப்பு இறகும் வெள்ளிறகும் போர்த்தி
கடந்து தவழும் ககனப் பறவை
நித்யம் தரித்து மரித்த பின்னாலும்
பொழிவிற்சோராது வான்மசிக் குடுவை
அழிவதும் பொங்கி வழிவதுமாய்
கிடக்கும் கண்ணாடிக் கள்மொந்தை
சுற்றிலும் போதையில்
விண்கண்கள் மந்தை
படுத்து உறங்கும் புவிமீது
பழுத்திறங்கும் கனிரசம்
பால்வெண்ணிலவின் பாதரசம்
சூரிய ஆதியில் சந்திர ஜோதி
பெருகவும் உருகவும் அதன் தனிநியதி
உடுக்கள் உதிக்காத மாலை
நிலா வீசுவது வாளை
நீல எழில் வானம்
கோலத் தனிமோனம்
தேயும் ஓயும் பாயும்
ஆகாசக் கற்பூரம்...